
Kumily hill station
கூடலூர், டிச.5:
குமுளி அருகேயுள்ள வாகைமண் பகுதிக்கு சுற்றுலாப் பயணிகள் அதிக எண்ணிக்கையில் வந்து செல்கின்றனர். இதையடுத்து வாகைமண் பகுதியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த கேரள சுற்றுலாக் கழகம் சார்பில் ரூ.1.19 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
கேரளா மாநிலம், தமிழக எல்லைப்பகுதியான குமுளிக்கு அருகே வாகைமண் உள்ளது. தென்னிந்தியாவில் உள்ள உயரமான மலைப்பகுதிகளில் இதுவும் ஒன்று. மேலும் ஆசியாவில் அதிகமாக காற்று வீசும் பகுதிகளில் ஒன்றாகவும் உள்ளது. இங்கு முட்டைக்குன்று, புல்மேடு, நீர்த்தேக்கங்கள், தற்கொலை விளிம்பு மற்றும் சிலுவை வடிவில் உள்ள மலைகள் உள்ளன. எப்போதும் பச்சைப்பேசலென காட்சியளிக்கும் இப்பகுதிக்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.
ஆனால், இங்கு அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை. இதனால், சுற்றுலாப் பயணிகள் இயற்கை எழிலை ரசித்துவிட்டு உடனே திரும்ப வேண்டியுள்ளது. தேக்கடியில் படகு விபத்து ஏற்பட்டதையடுத்து அங்கு படகு சவாரி நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் தேக்கடிக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைந்து வருகிறது. இதையடுத்து, வாகைமண் பகுதிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில் தற்போது அந்த பகுதியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த கேரள சுற்றுலா வளர்ச்சிக்கழகம் ரூ.1.19 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. வணிகவளாகம், தங்கும் விடுதி, தகவல் தொடர்பு மையம், ஆங்காங்கே குடிநீர் மற்றும் பொதுக்கழிப்பறை வசதிகளும், நான்கு பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் தங்கி இயற்கை அழகை ரசிக்கும் வகையில் காட்டேஜ்கள் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
தற்போது தேக்கடியில் படகு சவாரி இல்லாததால் அங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் குமுளி அருகேயுள்ள ராமக்கல் மெட்டு, செல்லாறு கோவில், வாகைமண் ஆகிய பகுதிகளுக்கு அதிக அளவில் வந்து செல்கின்றனர். மேலும், சபரிமலை சீசன் என்பதால் கோயிலுக்குச் சென்று திரும்பும் பக்தர்கள் தேக்கடிக்குப் பதிலாக இப்பகுதிக்குச் சென்று இயற்கை அழகை ரசிக்கின்றனர்.
வாகை மண் பகுதி மிக உயரம் என்பதாலும், பாராகிளைடிங் செய்ய ஏற்ற இடம் என்பதாலும் கடந்த 3 ஆண்டுகளாக பாரா கிளைடிங் போட்டியும் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த செப்டம்பர் மாதம் நடந்த பாராகிளைடிங் போட்டியில் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் மட்டுமின்றி இந்திய விமானப்படை வீரர்களும் கலந்துகொண்டனர். நேபாளம், ரஷ்யா சுவிட்சர்லாந்து. இத்தாலி, பிரான்ஸ், ஜெர்மன், ஹங்கேரி, பிரேசில், தாய்லாந்து உள்பட 10 நாடுகளைச் சேர்ந்த 6 பெண்கள் உட்பட 71 பேர் பாராகிளைடிங் போட்டியில் பங்கேற்றனர்.
அடிப்படை வசதிகளுக்கு ரூ.1.19 கோடி ஒதுக்கீடு
கூடலூர், டிச.5:குமுளி அருகேயுள்ள வாகைமண் பகுதிக்கு சுற்றுலாப் பயணிகள் அதிக எண்ணிக்கையில் வந்து செல்கின்றனர். இதையடுத்து வாகைமண் பகுதியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த கேரள சுற்றுலாக் கழகம் சார்பில் ரூ.1.19 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.கேரளா மாநிலம், தமிழக எல்லைப்பகுதியான குமுளிக்கு அருகே வாகைமண் உள்ளது. தென்னிந்தியாவில் உள்ள உயரமான மலைப்பகுதிகளில் இதுவும் ஒன்று. மேலும் ஆசியாவில் அதிகமாக காற்று வீசும் பகுதிகளில் ஒன்றாகவும் உள்ளது. இங்கு முட்டைக்குன்று, புல்மேடு, நீர்த்தேக்கங்கள், தற்கொலை விளிம்பு மற்றும் சிலுவை வடிவில் உள்ள மலைகள் உள்ளன. எப்போதும் பச்சைப்பேசலென காட்சியளிக்கும் இப்பகுதிக்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.ஆனால், இங்கு அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை. இதனால், சுற்றுலாப் பயணிகள் இயற்கை எழிலை ரசித்துவிட்டு உடனே திரும்ப வேண்டியுள்ளது. தேக்கடியில் படகு விபத்து ஏற்பட்டதையடுத்து அங்கு படகு சவாரி நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் தேக்கடிக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைந்து வருகிறது. இதையடுத்து, வாகைமண் பகுதிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில் தற்போது அந்த பகுதியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த கேரள சுற்றுலா வளர்ச்சிக்கழகம் ரூ.1.19 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. வணிகவளாகம், தங்கும் விடுதி, தகவல் தொடர்பு மையம், ஆங்காங்கே குடிநீர் மற்றும் பொதுக்கழிப்பறை வசதிகளும், நான்கு பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் தங்கி இயற்கை அழகை ரசிக்கும் வகையில் காட்டேஜ்கள் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.தற்போது தேக்கடியில் படகு சவாரி இல்லாததால் அங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் குமுளி அருகேயுள்ள ராமக்கல் மெட்டு, செல்லாறு கோவில், வாகைமண் ஆகிய பகுதிகளுக்கு அதிக அளவில் வந்து செல்கின்றனர். மேலும், சபரிமலை சீசன் என்பதால் கோயிலுக்குச் சென்று திரும்பும் பக்தர்கள் தேக்கடிக்குப் பதிலாக இப்பகுதிக்குச் சென்று இயற்கை அழகை ரசிக்கின்றனர்.வாகை மண் பகுதி மிக உயரம் என்பதாலும், பாராகிளைடிங் செய்ய ஏற்ற இடம் என்பதாலும் கடந்த 3 ஆண்டுகளாக பாரா கிளைடிங் போட்டியும் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த செப்டம்பர் மாதம் நடந்த பாராகிளைடிங் போட்டியில் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் மட்டுமின்றி இந்திய விமானப்படை வீரர்களும் கலந்துகொண்டனர். நேபாளம், ரஷ்யா சுவிட்சர்லாந்து. இத்தாலி, பிரான்ஸ், ஜெர்மன், ஹங்கேரி, பிரேசில், தாய்லாந்து உள்பட 10 நாடுகளைச் சேர்ந்த 6 பெண்கள் உட்பட 71 பேர் பாராகிளைடிங் போட்டியில் பங்கேற்றனர்.அடிப்படை வசதிகளுக்கு ரூ.1.19 கோடி ஒதுக்கீடு